Thursday 3 May 2018

திருமணத் தடை அகலும்!

திருமணத் தடை அகலும்!





காளி ஸ்ரீதிருக்காமேஸ்வரர், ஸ்ரீஆதிவராக நித்ய கல்யாணப் பெருமாள் 

திருமணம் ஆகவேண்டிய வயதில், மணமேடை காணாமல் இருக்குற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கிற தோஷத் தடைகளை அகற்றி மணமேடையில் அமர்த்தி வைக்கக்கூடிய பரிகார ஆலயங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் -தற்போது நாம் தரிசிக்கக் கூடிய காளி என்ற கிராமத்தில் இருக்கிற சிவாலயம். நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகாவில் இருக்கிறது காளி. மயிலாடுதுறையில் இருந்து மூவலூர் வழியாகச் செல்லும் சாலையில் 13கி .மீ. தொலைவிலும், திருமணஞ்சேரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் அமைத்துள்ளது காளி கிராமம்.

இந்த ஆலயத்தில் சிவனும் பெருமாளும் எழுந்தருளி, திருமணத் தடைகளை அகற்றி ஆசி வழங்குகிறார்கள் என்பது சிறப்பு!

திருமணத் தடையை அகற்றுவதற்கு சிவனும் இங்கே இருக்கிறார். அம்மையும் இருக்கிறாள். பூமாதேவித் தங்கிய பெருமாளும் இருக்கிறார். ஒரே ஆலயத்தில் இதுபோன்ற அமைப்பைத் தரிசிப்பது அரிது. திருமணத்துக்கு இங்கே பிராத்தித்துக்கொண்டு பலரும் பலன்பெறுகிறார்கள் . 

Buy Latest & Unique #WeddingCards Online now @ http://bit.ly/2jF58wi

for Detail Call Us : 84899 28780
Address:100, Kamarajar Salai, Opposite to Nirmala School, 
Madurai-625 009

No comments:

Post a Comment